இடுகைகள்

ஐயன் பந்தி - 22

  நெருப்பு  திருவாடல் - 9 தூயதை மட்டும் கோரும் தெய்வங்களுக்கு கொடுக்க நம்மிடம் எதுவுண்டு? இனி வருபவளோ    பெருங்கருணையின் பேரூற்று,  எளியவள், எச்சிலும், மிச்சிலும் கூட போதும் என வந்தவள். நம்   மனதை விட எச்சிலான பண்டம் எது? அதை  விடவும் அழுக்கும் குப்பையும் நிறைந்த இடமொன்று உண்டா? நம் மனமெனும் குப்பைக் குவியலின் மேல் அரியணையென வீற்றிருந்து யாழ் மீட்டுபவள். இவளைப்போல் மானிடரின் குறை அறிந்து ஏற்கும் இன்னொரு தெய்வம்  இவ்வுலகிலில்லை. குற்றங்கள் மட்டுமே  கொண்டவரையும் விலக்காமல் அவர் குற்றங்களையே  குணங்கள் எனக் கொள்பவள்!  நாமனைவரும் எளிய கை கால் உதறி விளையாடும் மழலைகளே அவள் மடியில்.  அவள்  வயிற்றில் சுமந்திருக்கும் கருவுக்குள் நிறைந்து, அவளையே உண்டு அவளின் உள்ளேயே உறங்கும் குழந்தைகள். எதன் பொருட்டும் கைவிடாத ஒரே தெய்வம். குறைகள் முற்றும் இல்லாத முழுமையும் தூயதான ஒருவன் அவளைக் கடந்து போகக்கூடும். அப்போதும் அவள் கைவிட்டதால் அல்ல.  இவளே உங்களுக்கு மூன்றாம் மகவாக பிறப்பாள். முறிந்த பழஞ்சுளவால் ஏந்தி, பழந்துணியால் சுற்றி வையுங்கள...

ஐயன் பந்தி - 21

நெருப்பு  திருவாடல் - 8 மகிஷனின் கொடும் படையெடுப்பையோ, அதன் மூலமாக நிகழ்ந்த அட்டூழியங்களை பற்றியோ எதுவும் அறியாது, ஏழாம்கருங்கடலின் ஆழத்தில்,  ஒளி ஊடுருவி அலைபாயும், பளிங்கு மாளிகையில்  வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என்னும் எட்டு நாகங்களையும் அவர்களின் பத்தினிமார்களோடு நிலைநிறுத்தி, மழலை வேண்டி தவம் இருந்தனர் நாககன்னி என்னும் நாக அரசியும், அவள் கணவனான நாகராஜனும். அவர்கள் ஒருவருக்கொருவர் அல்லாது வேறொருவரையும் காணாத, வேறொருவருடனும் உரையாடாத நோன்பு நோற்றிருந்தனர்.  தக்ஷக பெருங்குலத்தில் பிறந்து, அனந்தர் குலத்தில் உதித்த நாகராஜனை மணமுடித்த நாளில் இருந்து, நாககன்னி ஒரு குறையும் கொண்டதில்லை. ஆனாலும் மணமுடித்து பன்னிரு வருடங்கள் ஆகியும் மழலைச்செல்வம் மட்டும் தங்கவில்லை.  நாகராஜன் அரச குலத்தில் பிறந்தவன் அல்ல, அனந்தர் குலத்தில் பிறந்த எளிய காவலன், நாககன்னியோ தக்ஷக மன்னரின் பட்டத்து இளவரசி. அவள் தந்தையாகிய அரசன் தக்ஷகன் நடத்திய மகள் வேட்டல் பந்தலில்  அஷ்ட நாகவினங்களின் பல அரச குலத்தவர்கள் வந்து பல விதமான  வரிசைகள் ...

ஐயன் பந்தி - 20

  நெருப்பு  திருவாடல் - 7 "சரி மலையரசன்பட்டிணம் வந்தாளோன்னோ அம்மா, என்னாச்சு அப்புறம்" என்று  என்னைத்தூண்டினார் ஐயர்.  நான் மீண்டும் சொல்லத்துவங்கினேன், வில்லுக்காரன் சொன்னபடியே.  "பல காலங்களாக மலையரசன் பட்டணத்திலே மக்களோடு மக்களாக புற்றிடங்கொண்டு வீற்றிருந்த அம்மை மண்ணில்  மீண்டும் பிறந்து விளையாட எண்ணம் கொண்டாள். அவள் எண்ணிய மாத்திரத்திலே அவ்வாடலும் துவங்கியது."  மண்ணால் கோட்டை கட்டினால், மழையால் கரையும் என்று, ஆனிபொன்னால் கோட்டை கட்டி, பவளத்தால் முற்றம் விரித்து,  எருமைத்தலை மகிடம் சூடி, ஆண்டு வந்தான் மகிஷன் என்னும் பேரரசன்.    அவன் ஆண்ட அந்நாட்டிற்கு மகிஷ நாடு என்றும், அதன் தலைநகரிக்கு மகிஷபுரி பட்டிணம் என்றும் பெயர்.  நெல் விதைத்தால் நெல் விளையும், பொன் விதைதால் பொன் விளையும் மகிஷ நாட்டில், ஊர்களும், நகரங்களும், எந்நாளும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. மன்னன் மகிஷனோ, பொன்னுக்கும் மாற்றுக்குறையும், மகிஷன் சொன்ன சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நாளும் மாற்றுக்குறையாது, என்று அறம் பிறழாது ஆண்டு வந்தான். அறம் பிறழாத அவன் ஆட்சியில், வளம்...