இடுகைகள்

ஐயன் பந்தி - 19

நெருப்பு  திருவாடல் - 6  "வலியது என்றாள் என்ன ?" முதுவன் கேட்டார் "இந்த மலை வலியது" என்றான் வளைஞன். "அதைத்துளைத்து கீறிய விதை அதனினும் வலியது அல்லவா?" என்றார் முதுவன் "இல்லை, அது விளைய தன்னை நெகிழ்த்திக்கொண்ட மலையே வலியது" என்றாள் அரசியாள். "மான் மீது பாயும் வேங்கை வலியது தான், ஆனால் தன் குட்டியை காப்பாதற்காக, அதன் குறுக்கே பாய்ந்து தன்னுயிரை கொடுக்கும்  தாய் மான் அதனினும் வலியது” என்றான் வளைஞன்.  "நாள் எல்லாம் அலைந்து, பசித்து, கலைத்து, கொளுத்த பன்றி ஒன்றினுக்கு குறிவைத்த  வேட்டைக்காரன், அதன் மடியை முட்டி பாலருந்தும் குட்டிகளை  கண்ட போது அதை விட்டுட்டு உணவருந்தாமல் இரவு உறங்குவான் என்றால், அவன் தாய் மானினும்  வலியவனாவன்  அல்லவா?" என்றார் முதுவன். 'ஆம்' என்றாள் அரசியாள்  "கருணையும், அன்பும்,  நல்லுணர்வுகள் அத்தனையும், வலியதே. அதை விடவும் வலியது என எதுவும் உண்டா" ? அரசியாளும், வளைஞனும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே நோக்கி அவர் மேலும் சொல்லக்காத்திருந்தார்கள்.  “மானை படைத்து அதை உண்ணும் வேங்கையையும் படைத்தது எதுவோ,...

ஐயன் பந்தி - 18

  நெருப்பு  திருவாடல் - 5 விடிந்து   சற்று பொழுது   கடந்தபோது குற்றால மரத்தின் அடியில் தென் திசை நோக்கி கிடந்த கல் திட்டையின் மேல் இடக்காலை மேலேயே ஊன்றி மறு காலைக் கீழே தரையில் வைத்து அமர்ந்திருந்த முதுவனை விழுந்து வணங்கினர் அரசியாளும் வளைஞனும். பின், மண்ணில்  பதித்திருந்த வலக்காலடியின் அருகமர்ந்தனர். மெல்லிய புன்னகையோடு அவர்களை நோக்கிய முதுவன் சொல்லத்துவங்கினான்.  " ஆதியில் சொல் மட்டுமேயிருந்தது, அதற்குமுன் அதுவே ஏதுமற்றதாயும் இருந்தது. அதுவே உன்னில் உள்ளது, என்னிலும் உள்ளது. அதுவே நீ " என்று சொல்லி வலக்கையை வளைஞனின் தலையிலும், இடக்கையை அரவரசியாளின் தலையிலும் வைத்தார் முதுவன். பின் அவர்கள் அறிந்தனர் அதுவானதும் பின் இதுவரையானதும்.  பரமென்ற அதுவாய் இருந்தனர். அது அசைவற்று இருந்தது. தன்னையே தான் விழுங்கி காத்திருந்தது. தான் என்பதை அறிந்ததால் அசைவுற்றது. அசைந்து  அலைவுற்றது. அருவும் உருவமானது. பின் நீண்டு வளைந்து இரண்டு என்றானது, ஒன்று கொடுத்திட ஒன்று பெற்றது. கொடுத்ததும் பெற்றிட, பெற்றதும் கொடுத்தது. அவை நாகம் என்ற சொல்லால் தம்மை அறிந்தன. அவ்வாறே அவ...

ஐயன் பந்தி - 17

நெருப்பு  திருவாடல் - 4 மலைக்காணியின் கனத்த அடிக்குரல், பின்னிரவு பனியில் நனைந்த மரத்தின் இலை உதிர்க்கும் துளிகளென சொல் சொல்லாக விழுந்து கொண்டிருந்தது. கேட்பவர்கள் முகங்களில் இமைகொட்டும் சலனங்களன்றி வேறொரு சலனமும் இல்லை. உள்ளங்களோ, நிறைந்து வழிந்து பரவி ஒன்றென்றே கூடின. ஆடி மாதக்காற்றும்  உச்சி போதில் சற்று சமனம் கொண்டிருந்ததால், ஏற்றிய தீபம் கூட ஆடாது அமைந்து எரிந்தது.  காணியின் குரலில் பேச்சாக ஒலித்துக்கொண்டிருந்த 'பேச்சியின் கதை' வேகம் கூடி சந்தத்தோடு கவி என வடிவுகொண்டது. சாரல் என தூறல் என மாறி பின் பெருமழை என ஓலமிட்டு பொழிந்தது. பாட்டி கூர்ந்து தரையில் பார்த்தவாறு தன் காலில் அணிந்திருந்த தண்டையில் அதற்கேற்ப சன்னமாக தாளம் போல தட்டிக்கொண்டிருந்தாள். அவள் தண்டையின் உள்ளிருந்த பரல்கள் குலுங்கி அசங்குவது மலைக்காணியின் கார்வையோடு இசைந்து நீண்டது.  "ஆதியில செம்பக மலை குடின்னு அவுகளுக்கு பேரும் இல்ல, அவுக அந்த செம்பக வனத்தில குடியேறவும் இல்லை.  அதுக்கும் மேக்க இன்னும் ஏழுமலைச் சரிவு தாண்டி பிச்சி பூத்த வனத்துல குடியிருந்தாக. அதுக்கு மலையாள வனம்னு பேரு. கருங்கல்லும் ...

ஐயன் பந்தி - 16

நெருப்பு திருவாடல் - 3 முதல் நாள் கதை முடிந்து வீடு திரும்பிய போது, வானம் புலர சிறு பொழுதே இருந்தது. இன்னும் ஏழு நாள் கதை மீதம் இருக்கிறது. அக்கா குருவிகள் கொல்லைகளில் மரத்துக்கு மரம் அமர்ந்து சிலம்பும் அக்கோவ் குரல்கள் கேட்க தொடங்கியிருந்தன. நான் கோவிந்தன் தாத்தாவீட்டு திண்ணையிலே கையை தலைக்கு வைத்து படுத்து உறங்கிவிட்டேன். ஆச்சி தான் எழுப்பி உமிக்கரியும் செம்பில் நீரும் கொடுத்து பல் விளக்கச்சொல்லி, நீராகாரமும் கொடுத்தாள்.  என்றும் இல்லாத வழக்கமாக ஐயர் காலையிலேயே தெருவுக்குள் வந்தார். தாத்தா வழக்கம் போல கருக்கலிலேயே நீராடி நெற்றியில் இட்ட திருநீற்றோடு, முந்தைய இரவின் உறக்க சடவே இல்லாமல், அமர்ந்திருந்தார். ஐயர் திண்ணையில் அமர்ந்தபடி, உறக்கம் முழுதும் கலையாத என்னைப்பார்த்து, "என்னடா அம்பி வில்லடியா நேற்று" என்று விட்டு தாத்தாவிடம், என்ன கதைடா படிச்சான் என்றார். "அஷ்ட காளி கதை" என்றார் கோவிந்தன் தாத்தா. "ஏன் டா, அம்பி சுந்தரம் நீ கேட்ட கதையை சொல்லேன் கேட்போம்" என்றார் ஐயர். நானும் நினைவில் இருந்து கதையை திரட்டி சொல்லத்துவங்கினேன். பாட்டியும் தாத்தாவும் கூட அ...

ஐயன் பந்தி - 15

நெருப்பு திருவாடல் - 2 "அண்ணாச்சி, அண்ணாச்சி, இப்பதான் எனக்கு ஒரு உண்மை விளங்குச்சு" என்றார்  குடத்துக்காரர்  "விளங்கிடுச்சா, அது என்ன உண்மை" என்றார் வில்லடிக்காரர். "அந்த கல்பத்தில" "எந்த கர்பத்தில" "கர்ப்பம் இல்ல அண்ணாச்சி, கல்பத்தில" "சரி எந்த கல்பத்தில?" "க்ருத யுகத்துல பிரம்மாவுக்கு ஒரு தலை போச்சே, அந்த கல்பத்துக்கு" "அந்த கல்பத்துக்கு என்ன?" "அந்த கல்பத்துக்கு நான் தான் பிரம்மா" "அடேய், சொல்றதுக்கும் வர முறை வேண்டாமா?" "இல்ல அண்ணாச்சி நான் சொல்றத முழுசா கேளுங்க" "சரி சொல்லு அந்த கல்பத்திலையாது, அஞ்சு தலை இருந்துச்சு ஒண்ண வெட்டினார் சிவன், இப்ப ஒரு தலை தான் இருக்கு, நான் என்னத்த வெட்ட" "அதில்ல அண்ணாச்சி, அந்த கல்பத்தில பிரம்மாவா இருந்தனா?" "இருந்த, திரும்ப இங்க வந்து ஏன்டா பிறந்த? என் உசுர எடுக்கவா" "படைக்கைல ஒரு பெரிய பாவத்தை பண்ணிபோட்டேன், அதான் இப்படி மனுஷ பிறவியா பிறந்து லோல்படுறேன்" "அப்படி என்ன பாவத்தை செஞ்சீரு பிரம்ம தேவர...

ஐயன் பந்தி - 14

நெருப்பு - 2 திருவாடல் - 1 கழல் சூடி ஊன்றிய வலப்பாதத்தின் பெருவிரல் அச்சிற் சுழன்றது ஒரு செந்நிறத் தழல். உள் பாதத்தின் குழிவில் ஒரு துளி கரும்புள்ளி. அது சுழன்று பின் சிதறி ஒன்று நூறு என ஒளிப்புள்ளிகளைச் சிந்தி சிதறி ஆயிரம் வண்ணங்கள் காட்டி பறந்தது. அதில் பிறந்தனர் ஆயிரம் ஆயிரம் ஆதித்தியர்கள், ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள், ஆயிரம் ஆயிரம் கோளங்கள், அவைடங்கிய ஆயிரம் அண்டங்கள். அண்டங்களை கருச்சுமந்த பேரண்டங்கள். சுழலும் அப்பாதம் பதிந்த போது மறைந்து, மீண்டும் எழுந்த போது பிறந்தது காலம். காலமற்ற பாழில் நிகழும் அச்செந்நிற தழலாட்டத்தை அது மட்டுமே அறிந்திருந்தது. அல்லது அதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கு அறிதலும் இல்லை. தூக்கிய இடப்பாதம் வலப்புறமாய்  அந்தரத்தில் நிலைக்க,  இடைவளைத்த புலி தோல் ஆடை தொடை மறைத்து தொங்கி சுழன்றது. கரியானை தோல் உறிவொன்று இடத்தோல் மூடி வலப்புறமாய் வளைந்து விரிந்து பறந்தது. கண்டத்தில் நீல மணி மின்னென ஒளிவிட, நிமிர்ந்த  முகத்தில், இருவிழிகளும் மலர, நடு நுதலில் கண் ஒன்று தீவிழித்தது. சிவந்த சடைக்கற்றைகள் பின்னிச் சுழலும் தலை மு...