இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 19

நெருப்பு  திருவாடல் - 6  "வலியது என்றாள் என்ன ?" முதுவன் கேட்டார் "இந்த மலை வலியது" என்றான் வளைஞன். "அதைத்துளைத்து கீறிய விதை அதனினும் வலியது அல்லவா?" என்றார் முதுவன் "இல்லை, அது விளைய தன்னை நெகிழ்த்திக்கொண்ட மலையே வலியது" என்றாள் அரசியாள். "மான் மீது பாயும் வேங்கை வலியது தான், ஆனால் தன் குட்டியை காப்பாதற்காக, அதன் குறுக்கே பாய்ந்து தன்னுயிரை கொடுக்கும்  தாய் மான் அதனினும் வலியது” என்றான் வளைஞன்.  "நாள் எல்லாம் அலைந்து, பசித்து, கலைத்து, கொளுத்த பன்றி ஒன்றினுக்கு குறிவைத்த  வேட்டைக்காரன், அதன் மடியை முட்டி பாலருந்தும் குட்டிகளை  கண்ட போது அதை விட்டுட்டு உணவருந்தாமல் இரவு உறங்குவான் என்றால், அவன் தாய் மானினும்  வலியவனாவன்  அல்லவா?" என்றார் முதுவன். 'ஆம்' என்றாள் அரசியாள்  "கருணையும், அன்பும்,  நல்லுணர்வுகள் அத்தனையும், வலியதே. அதை விடவும் வலியது என எதுவும் உண்டா" ? அரசியாளும், வளைஞனும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே நோக்கி அவர் மேலும் சொல்லக்காத்திருந்தார்கள்.  “மானை படைத்து அதை உண்ணும் வேங்கையையும் படைத்தது எதுவோ,...

ஐயன் பந்தி - 18

  நெருப்பு  திருவாடல் - 5 விடிந்து   சற்று பொழுது   கடந்தபோது குற்றால மரத்தின் அடியில் தென் திசை நோக்கி கிடந்த கல் திட்டையின் மேல் இடக்காலை மேலேயே ஊன்றி மறு காலைக் கீழே தரையில் வைத்து அமர்ந்திருந்த முதுவனை விழுந்து வணங்கினர் அரசியாளும் வளைஞனும். பின், மண்ணில்  பதித்திருந்த வலக்காலடியின் அருகமர்ந்தனர். மெல்லிய புன்னகையோடு அவர்களை நோக்கிய முதுவன் சொல்லத்துவங்கினான்.  " ஆதியில் சொல் மட்டுமேயிருந்தது, அதற்குமுன் அதுவே ஏதுமற்றதாயும் இருந்தது. அதுவே உன்னில் உள்ளது, என்னிலும் உள்ளது. அதுவே நீ " என்று சொல்லி வலக்கையை வளைஞனின் தலையிலும், இடக்கையை அரவரசியாளின் தலையிலும் வைத்தார் முதுவன். பின் அவர்கள் அறிந்தனர் அதுவானதும் பின் இதுவரையானதும்.  பரமென்ற அதுவாய் இருந்தனர். அது அசைவற்று இருந்தது. தன்னையே தான் விழுங்கி காத்திருந்தது. தான் என்பதை அறிந்ததால் அசைவுற்றது. அசைந்து  அலைவுற்றது. அருவும் உருவமானது. பின் நீண்டு வளைந்து இரண்டு என்றானது, ஒன்று கொடுத்திட ஒன்று பெற்றது. கொடுத்ததும் பெற்றிட, பெற்றதும் கொடுத்தது. அவை நாகம் என்ற சொல்லால் தம்மை அறிந்தன. அவ்வாறே அவ...

ஐயன் பந்தி - 17

நெருப்பு  திருவாடல் - 4 மலைக்காணியின் கனத்த அடிக்குரல், பின்னிரவு பனியில் நனைந்த மரத்தின் இலை உதிர்க்கும் துளிகளென சொல் சொல்லாக விழுந்து கொண்டிருந்தது. கேட்பவர்கள் முகங்களில் இமைகொட்டும் சலனங்களன்றி வேறொரு சலனமும் இல்லை. உள்ளங்களோ, நிறைந்து வழிந்து பரவி ஒன்றென்றே கூடின. ஆடி மாதக்காற்றும்  உச்சி போதில் சற்று சமனம் கொண்டிருந்ததால், ஏற்றிய தீபம் கூட ஆடாது அமைந்து எரிந்தது.  காணியின் குரலில் பேச்சாக ஒலித்துக்கொண்டிருந்த 'பேச்சியின் கதை' வேகம் கூடி சந்தத்தோடு கவி என வடிவுகொண்டது. சாரல் என தூறல் என மாறி பின் பெருமழை என ஓலமிட்டு பொழிந்தது. பாட்டி கூர்ந்து தரையில் பார்த்தவாறு தன் காலில் அணிந்திருந்த தண்டையில் அதற்கேற்ப சன்னமாக தாளம் போல தட்டிக்கொண்டிருந்தாள். அவள் தண்டையின் உள்ளிருந்த பரல்கள் குலுங்கி அசங்குவது மலைக்காணியின் கார்வையோடு இசைந்து நீண்டது.  "ஆதியில செம்பக மலை குடின்னு அவுகளுக்கு பேரும் இல்ல, அவுக அந்த செம்பக வனத்தில குடியேறவும் இல்லை.  அதுக்கும் மேக்க இன்னும் ஏழுமலைச் சரிவு தாண்டி பிச்சி பூத்த வனத்துல குடியிருந்தாக. அதுக்கு மலையாள வனம்னு பேரு. கருங்கல்லும் ...