இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 15

நெருப்பு திருவாடல் - 2 "அண்ணாச்சி, அண்ணாச்சி, இப்பதான் எனக்கு ஒரு உண்மை விளங்குச்சு" என்றார்  குடத்துக்காரர்  "விளங்கிடுச்சா, அது என்ன உண்மை" என்றார் வில்லடிக்காரர். "அந்த கல்பத்தில" "எந்த கர்பத்தில" "கர்ப்பம் இல்ல அண்ணாச்சி, கல்பத்தில" "சரி எந்த கல்பத்தில?" "க்ருத யுகத்துல பிரம்மாவுக்கு ஒரு தலை போச்சே, அந்த கல்பத்துக்கு" "அந்த கல்பத்துக்கு என்ன?" "அந்த கல்பத்துக்கு நான் தான் பிரம்மா" "அடேய், சொல்றதுக்கும் வர முறை வேண்டாமா?" "இல்ல அண்ணாச்சி நான் சொல்றத முழுசா கேளுங்க" "சரி சொல்லு அந்த கல்பத்திலையாது, அஞ்சு தலை இருந்துச்சு ஒண்ண வெட்டினார் சிவன், இப்ப ஒரு தலை தான் இருக்கு, நான் என்னத்த வெட்ட" "அதில்ல அண்ணாச்சி, அந்த கல்பத்தில பிரம்மாவா இருந்தனா?" "இருந்த, திரும்ப இங்க வந்து ஏன்டா பிறந்த? என் உசுர எடுக்கவா" "படைக்கைல ஒரு பெரிய பாவத்தை பண்ணிபோட்டேன், அதான் இப்படி மனுஷ பிறவியா பிறந்து லோல்படுறேன்" "அப்படி என்ன பாவத்தை செஞ்சீரு பிரம்ம தேவர...

ஐயன் பந்தி - 14

நெருப்பு - 2 திருவாடல் - 1 கழல் சூடி ஊன்றிய வலப்பாதத்தின் பெருவிரல் அச்சிற் சுழன்றது ஒரு செந்நிறத் தழல். உள் பாதத்தின் குழிவில் ஒரு துளி கரும்புள்ளி. அது சுழன்று பின் சிதறி ஒன்று நூறு என ஒளிப்புள்ளிகளைச் சிந்தி சிதறி ஆயிரம் வண்ணங்கள் காட்டி பறந்தது. அதில் பிறந்தனர் ஆயிரம் ஆயிரம் ஆதித்தியர்கள், ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள், ஆயிரம் ஆயிரம் கோளங்கள், அவைடங்கிய ஆயிரம் அண்டங்கள். அண்டங்களை கருச்சுமந்த பேரண்டங்கள். சுழலும் அப்பாதம் பதிந்த போது மறைந்து, மீண்டும் எழுந்த போது பிறந்தது காலம். காலமற்ற பாழில் நிகழும் அச்செந்நிற தழலாட்டத்தை அது மட்டுமே அறிந்திருந்தது. அல்லது அதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கு அறிதலும் இல்லை. தூக்கிய இடப்பாதம் வலப்புறமாய்  அந்தரத்தில் நிலைக்க,  இடைவளைத்த புலி தோல் ஆடை தொடை மறைத்து தொங்கி சுழன்றது. கரியானை தோல் உறிவொன்று இடத்தோல் மூடி வலப்புறமாய் வளைந்து விரிந்து பறந்தது. கண்டத்தில் நீல மணி மின்னென ஒளிவிட, நிமிர்ந்த  முகத்தில், இருவிழிகளும் மலர, நடு நுதலில் கண் ஒன்று தீவிழித்தது. சிவந்த சடைக்கற்றைகள் பின்னிச் சுழலும் தலை மு...