இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 12

படம்
புவியேழையும் பூத்தவளே - 8 செண்பகமும்,  மனோரஞ்சிதமும், செந்நிறத்தில் பூத்த அலரியும், காந்தளும், இளம் பொன்னிறத்தில் மகிழமும், கண்ணாயிக்குரிய செந்தாழை மடல்களும், செருவிளமும், கருவிளமும், வெண்ணிறத்தில் பலவகை மலர்களோடு கூட பவள மல்லிகை மலரும் கூட்டி தொடுத்த கதம்பத் தொடையை சாற்றி, பல வண்ணங்கள் கொண்ட தானையோடு செல்லியாயிக்கு பூசை.   எழுவரிலும் இளையவள். அதனாலயே அனைவருக்கும் இனியவள். எண்ணி முடியாத முகங்கள் அவளுக்கு. புன்னகைக்கும் எவர் முகத்திலும்  அவள் முகமே அக்கணத்தில் தோன்றி மறையும் என்பார்கள்.  சிறுபிள்ளைகள் சிரித்து விளையாடுவது கண்டால் காற்றாக மாறி அவர்கள் தலைகள் கோதி தானும் அவர்களோடு விளையாடுவாள். அவர்கள் இடும் கூச்சலாகி மலைகளில் மோதி எதிரொலிப்பாள். சிறுக்கி என்று இருந்தவள் உடலை பூக்கவைத்து பெண் என்று மலர்விப்பாள்.  சிறுவர்கள் கனவுக்குள் சென்று அமுதத்தின் மடை திறந்து,  ஆண் என்று அறியவைப்பாள்.  இவள் தீண்டும் வரை மழலை என்று இருந்தவர்கள், இள வியர்வை மணமும், முகத்தில் பூங்குருக்களும் கொண்டு இனிமை கொள்வார்கள். ஆணை பெண்ணுக்கும் பெண்ணை ஆணுக்கும் அறிவிப்பவள் அவ...

ஐயன் பந்தி - 11

படம்
புவியேழையும் பூத்தவளே - 7 மஜ்ஜை என்பது எலும்பின் மத்தியில் குழாய் என ஓடும் வெற்றிடத்தில் விதை ஓட்டினுள் பருப்பை போல நிறைவது. அதனாலேயே எலும்பு வலிமை கொண்டதாகிறது. எலும்பில் இருந்து தோன்றுவதால் அஸ்திஜம் என்றும், எலும்புக்குள் படியும் ஒரு வகை கொழுப்பு என்பதால் அஸ்திஸ்நேஹம் என்றும்,  எலும்பின் சாரமாக நிறைவதால் அஸ்திஸாரம் என்றும், உடலுக்கே சாரமென அமைவதால் தேஹசாரம்  என்றும், ஸுக்லம் என்னும் ஏழாம் தாதுவை உண்டாக்குவதால் ஸுக்ராஹாரம் என்றும் பெயருடையது. குழைவும் மிருதுவும் அதன் இரு குணங்கள்.  வாத தோஷத்தால் எலும்புகளுக்குள் உண்டாகும் வெற்றிடத்தில் நிறையும் மேதஸே மஜ்ஜையென அமைகிறது.  நகமும் முடியும் மஜ்ஜையில் இருந்து  பிறக்கும் உப தாதுக்கள். கண்ணில், தோலில், மலத்தில் உள்ள ஈரமும் அதனாலேயே. மென்மையான உறுப்புகளையும்,  ஈரப்பசையோடு மிளிரும் தோலையும், திடமான, வலுவான மூட்டுகளையும் கொண்ட உடல் மஜ்ஜையால் பொலிந்தது. மண்டையோட்டுக்குள் பாதி தெளிந்த வெண்ணெய் போல நிறையும் மஜ்ஜையே மூளை என்றாகி, மஸ்துலுங்கம் என்றும் மஸ்தக மஜ்ஜை என்றும் அமைகிறது. ஸ்னேஹனம் என்னும் உயவூட்டலோடு, உடலை வலுவூட...

ஐயன் பந்தி -10

படம்
புவியேழையும் பூத்தவளே - 6 "காரிமலை முகட்டுல ஒரு சுனையும், அதோட கரையில் ஒரு தாழம்புதரும் இருக்குல்ல" என்றார் மூப்பன் "செந்தாழ" என்றான் இளையான் "ஆமா அத சுற்றி ஒரு கரு நாகம் குடி இருந்துச்சு. ஒவ்வொரு முழு நிலாவுக்கும் காரிமலை காடு இறங்கி, மேல மலை முகட்டுக்கு வந்து ஏழம்மை திட்டைய ஏழுமுறை சுத்தி வலமா வரும். பச்சை பிள்ளைகளும் அதைக்கண்டா பதறாதுக. அதுவும் பதறாது. சில நேரம் மூப்பன் பூசைய கட்டிறவரைக்கும் அங்கயே படம் விரிச்சு நின்னிட்டு இருக்கும். ஈரேழு கொல்லம் அப்படி வாழ்ந்துட்டு,  அதுக்குபிறகு அந்த செந்தாழம் புதருக்கு பக்கத்தில இருந்த வளைக்குள்ள போனது திரும்பி வரவே இல்லை. அந்த கருநாகத்த முன்ன காரி மலைக்குடியில பிறந்து வாழ்ந்த ஒரு இளந்தாரினு சொல்லுவாக" என்றார் மூப்பன்.  "அவர் எப்படி பாம்பா மாறினாரு மூப்பா?" என்றான் இளையான். "அது அவரே ஏத்துக்கிட்ட வரம்டா, சாபம்னும் சொல்லலாம். அவருக்கு ஆயி அப்பன் இட்ட பேரு கரியன். அவர் வாழ்ந்த காலத்தில அவருக்கு நிகரா இந்த ஏழுமலைக் குடியிலையும் யாருமில்ல. மின்னுற கருப்பு தோலும், கட்டிவைச்ச கொண்டையும், கொண்டை கலையாம இருக்...