இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 9

படம்
புவியேழையும் பூத்தவளே - 5 ரக்தாக்ஷி ஆண்டு சைத்ர மாதம், சித்ரா நக்ஷத்திரமும் பூர்ண பொர்ணமியும் கூடிய புதன் கிழமையில்  ஆனேகுந்தி சுப்பிரமணிய சர்மனாகிய நான் குலதெய்வமாகிய தொண்டிக்கரை ஆகாச கருப்பனின் அருளாலும் சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தின் பலத்தாலும் சப்த தாதுக்களில் நான்காவதாய் அமைந்த மேதஸின் அபிமான தேவதையாகிய காகினி தேவியை கண்டேன். மாலை கனிந்து இரவு அணையும் வேளையில், சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தை உருவேற்றியிருந்த போது கூடத்தில் இட்டிருந்த நான்முக விளக்கில் எரிந்த சுடர்கள் நான்கிலிருந்தும் ஒளியென இறங்கி ஓர் உருவம் கொண்டு என் முன் அமர்ந்தாள் காகினி தேவி.  "துஷ்டி புஷ்டி மதி த்ருதி என்னும் நான்கும் என்னுடைய முகம்"  என்றாள்.  "உடலில் மேதஸ் என்னும் கொழுப்பின் வடிவில் இருப்பவள். அனைத்தையும் உடையவள் என்னும் நிறைவும்,  அனைத்தினுள்ளும் நிறைந்து பலம் என்றும்,  அனைத்தையும் அறிகின்ற அறிவென்றும்,  உடலிற் செயலில் வெளிப்படும் தைரியம் என்றும் விளங்குபவள் நானே. அன்னை என்றே உன் முன் வந்தேன். அன்னை என்பதாலேயே நிறைந்த கர்வம் உடையவளானேன். அதிகர்விதா என்று  என்னை அழைக்...

ஐயன் பந்தி - 8

புவியேழையும் பூத்தவளே - 4 சிவந்த முலை வரிசைகள் குலுங்க, உடல் எல்லாம் கரிய மயிர் அடர்ந்து, கொடுவாயின் இருப்புறமும்  இருகோடுகள் வளைந்து மேல் ஏறியிருக்க, தலை பருத்தும், உடல் சிறுத்தும் மண்ணை முகர்ந்து மூச்சால் கலைத்துக் கொண்டு, கொடுவாள்கள் என நீண்ட நகங்களோடு ஊர்ந்த படி வந்தது ஒரு மலைப்பன்றி. அவள் அங்கிருப்பதை அறிந்தது போல மதர்ப்பும்,  உருமலுமாக வந்தது ஒரு ஆண் பன்றி. அடர்ந்த காட்டின் இருளுக்குள் இருள் என நின்றன இரண்டும். கைகோர்த்த இலைத்தழைப்புகளின் இடைவெளி வழி  ஒளி அவற்றின் உடல்களில் சிந்தியிருந்தது. குறுங்காதுகள் சிலிர்க்க முகம் நிமிர்ந்து அவள் உருமினாள். அவன் இரண்டடி பின் வைத்தான். வால் சுழற்றி பின்னகர்ந்தவள்,  அறியும் முன்னும் பாய்ந்து முன்னேறினாள். அதே வேகத்தில் அவனும் பாய்ந்தான். பருத்த தலைகள் மோதி ஒலித்தன. மூச்சு சீரியபடி பின்னகர்ந்தனர் இருவரும்.   மோதியும் விலகியும் சுழன்றனர். எதிர் நின்று பாய்ந்து கோடு உரச தாக்கிக்கொண்டனர். பல பல முறை முட்டி முட்டி விலகினர். பாய்ந்து அவன் மோத வருகையில் தன் விலாவும் குறியும் காட்டி வால் சுழற்றி திரும்பி அவன் மோதும் முன் ...

ஐயன் பந்தி - 7

புவியேழையும் பூத்தவளே - 3 "மகத்துக்கா புறப்பாடு?" என்ற ராமசுப்பையர் "சிவ சிவா மகாதேவா" என்றபடி திண்ணையில் அமர்ந்தார். தெருவில் ஆட்கள் பயணம் போகிற களிப்பில் வழக்கத்து அதிகமான கூச்சலும் பரபரப்புமாக  அலைந்து கொண்டிருக்க, மாட்டு வண்டிகள் பாரம் ஏற்றி புறப்பட காத்து நின்றன.  "இன்னைக்கு ஷஷ்டில, திருச்செந்தூர்ல கொடி ஏறியிருக்கும், ஒவ்வொருத்தரா கிளம்புறாங்க" என்றார் கோவிந்தன் தாத்தா. நான் தாத்தா அருகில் அமர்ந்து,  அடுத்து ஓடப்போகிற வெள்ளை துண்டு பாவிற்கு கண்டு எண்ணி வைத்துக்கொண்டிருந்தேன். கண்டுகளை பாவோடியில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தால், மாலை பாவாக மீண்டும் போய் எடுத்து வரலாம்.  பாட்டி "இத இழை எடுங்க" என்று குழைந்த கண்டு ஒன்றை தாத்தாவிடம் கொடுத்து விட்டு, மறுபுறம் திண்ணையில் ராட்டில் அமர்ந்து, அரை குறையாக ஒழிந்த கண்டுகளைச் சோமாறித் தனியாக ஒரே குழலில் சுற்றி, ஒழிந்த குழல்களை சேர்த்துக்கொண்டிருந்தாள்.  "பழனிக்கு போறத இல்லையோ நீங்க எல்லாம் அவ்வளவா?" என்றார் ஐயர். "அது என்னமோ தெரியலடா எப்பவும் திருச்செந்தூர்க்கு தான் அத்தனை பேரும் அடிச்...

ஐயன் பந்தி - 6

புவியேழையும் பூத்தவளே - 2 ஆனமந்தி சுப்பிரமணிய ஐயன் சன்னாசிகளிடம் இருந்து மந்திரம் பெற்றதும், வைத்தியம் கைவரப்பெற்றதும் 108 ஓலைகளில் எழுதியது.  ருத்ரோத்காரி ஆண்டு ஆடி மாதம் அமாவாசை இரவு விடிய ஒரு முகூர்த்தம் இருந்த காலத்தில் மஹாகாளனாகிய, ஆகாச கருப்பனையும், சுப்பிரமணிய சுவாமியையும், மூதாதையர்களையும் தொழுது 11 சன்னாசிகளையும் தண்டனிட்டு வணங்கி அவர்கள் அருளிய மந்திரத்தையும், அதை உருவேற்றும் முறையையும் பெற்றேன். அதோடு கூட மூத்த சன்னாசி ஒற்றை பவளப் பரல்  கொண்ட வெண்கல சலங்கை மணி  ஒன்றையும் கொடுத்தார். பரல் உருண்டும், மணி ஒலிக்காது போகையில், மந்திரம் பலித்தது அறிவாய் என்றார். சொல்லி வைத்த முறைப்படி, ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் தெய்வத்தையும் குருவையும் தொழுது மந்திரத்தை உருவேற்றி வந்தேன். வெறும் சொல் என்று மட்டும் உள்ளேறிய அம்மந்திரம், நினைவென்றும் பின் உணர்வென்றும் ஆகி,  அகத்தில் ஒரு ரகசிய நாடியென சன்னமாய் துடித்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்கென்று தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை என்றானது. உண்மையில் அதன் பின் அத்துடிப்பை நிறுத்திக்கொள்வதும் கூட என் பிரயத்தனத்தால் ஆவதி...