இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயன் பந்தி - 13

நெருப்பு - 1 மீனாக்ஷி பாட்டி அடுப்படியில் இருந்தாள்.  சன்னமாக அவள் பாடும் குரல் கேட்டு கொண்டிருந்தது.  ஒரு கண்ணி பிச்சிப்பூ  ஒரு  முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ  ஒசிஞ்சு வைக்கும் கால்களுக்கு ஒலிக்கும் மணி கொலுசுகளாம்   மூனு கண்ணி பூவுனக்கு   மூம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ  முன்னே வைக்கும் கால்களுக்கு  முத்து மணி தண்டைகளாம் ஐந்து கண்ணி பூவுனக்கு  ஐம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு  அஞ்சு விரலும் மோதிரமாம்  அஞ்சு வித வளையல்களாம் ஏழு கண்ணி பூவுனக்கு ஏழு முழத்தில்  ஓரு சரமாம் - அம்மா உன்  எல்லையில்லா பேரழகாம்  எடுத்து வச்ச சீரடியாம்  நூறு கண்ணி பிச்சிப்பூ    நூறு முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு  அள்ளி முடிஞ்சுவிட்டு  ஆசையாக சூடி வைப்பேன்  ஓரடிக்கு ஒரு வளைவாம்  ஈரடிக்கு  இரு வளைவாம்  அடியடியா வைச்சல்லோ  அம்மா நீ வருகையிலே சர்ப்பத்தின் நடையல்லோ   நாகமணி பொட்டல்லோ   தாழம்பூ குடையல்லோ  மஞ்சள் வண்ண பட்டல்லோ  மஞ்சளிலே கா...